Ads Area

பா.உ. மன்சூரினால் அமையப் பெறவுள்ள சம்மாந்துறைப் பிரதேச பொறியியலாளர் காரியாலயம்.

சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்ப் பாவணையாளர்களின் நலன்கருதி திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியின் பலனாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சம்மாந்துறைப் பிரதேச பொறியியலாளர் காரியாலயம் மற்றும் நீர்க் கட்டணம் செலுத்தும் கருமபீடம் என்பன சம்மாந்துறை நீர் வழங்கல் திட்டக்காரியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இதன் நிர்மாணப் பணிகளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், விவசாய, நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறை உதவிப் பொதுமுகாமையாளர் பொறியியலாளர் எம்.எம்.நஸீல் கலந்து கொண்டு இதன் நிர்மாணப்பணிகளை அமைச்சருக்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கும் விளக்கிக் கூறியதுடன், இதன் நிர்மாணப்பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இக்காரியாலம் திறக்கப்படும் போது சம்மாந்துறை பிரதேச நீர் பாவணையாளர்கள் குடிநீர் பிரச்சினைக்கு அம்பாறை பிராந்திய காரியாலயத்துக்கு செல்ல வேண்டியதில்லை என்பதுடன், நீர்ப் பட்டியலுக்கான கட்டணங்களை வங்கிகளிலோ அல்லது வேறு எங்கும் கட்ட வேண்டியதில்லை. நீர்க் கட்டணம் செலுத்தும் கருமபீடத்திலே கட்ட முடியும்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe