(எம்.எம்.ஜபீர்)
அம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிவில் நிர்வாக நடவடிக்கைகள் என்பனவற்றை முன்னெடுப்பது தொடர்பாக அம்பாரை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசல் காசிம் ஆகியோரிற்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு மல்வத்தை 24ஆவது இராணுவபடைபிரிவின் தலைமைகத்தில் நேற்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எம்.எம்.அன்சார், அம்பாரை மாவட்ட நல்லிணக்குழுவின் உறுப்பினரும் உதவிக்கல்வி பணிப்பாளருமான எம்.ஏ.எம்.றசீன் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.