Ads Area

கல்முனையை கனதியாய் வடிவமைத்த சிற்பி மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின பிறந்த நாள் இன்று.

மிப்றாஸ் மன்சூர்

கல்முனை என்பது இலங்கையின் மூன்றாவது நகரமாக மட்டுமல்ல முஸ்லிம்களின் அடையாளச் சின்னமாகவும் இருந்து வந்தது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஏனைய  சமூகங்களுக்கு பல நகரங்கள் அவர்களுடைய அடையாளச் சின்னங்களாக இருந்துவரும் நிலையில் கல்முனை நகரம் ஒன்றே முஸ்லிம்கள் பெயர் சொல்லும் நகரமாக வடிவமைத்தே சிற்பிகளே  மர்ஹூம் எம்.எஸ்.காரியப்பர்,  மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர்  ஆகியோர் என்பதை ஏனைய  சமூக தலைவர் யாவருமே அறிவார்கள். 

அந்த வகையில் இன்று கல்முனையின் ஏட்டில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒளிமையான ஒரு நாளாகும்.-கல்முனை நகரை வடிவமைத்த சிற்பி முன்னாள் வர்த்தக,வாணிபத்துறை அமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் பிறந்த தினமே இன்று.

தனது தந்தையான ஏக்கீன் தம்பி ஆலிம் அவர்களைப் போல் தனது இளைய மகனை ஆலிமாக ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அப்துல் றஸாக் அவர்கள்.

நான்கு சகோதரர்களுக்கும், ஒரு சகோதரிக்கும் இளையவராய் 1933.05.30ம் திகதி பிறந்த ஏ.ஆர்.மன்சூர் அவர்களை ஆலிமாக்கும் அவரது தந்தையின் ஆசையை மாற்றிவிட்ட பாடசாலையாக கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயம் திகழ்ந்தது.

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில்  எமது பிரதேசத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றும் முதல் முதலில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவராகவும்   1943ம் ஆண்டு  எமது பிரதேசத்துக்கு அன்றே  பெருமையை சேர்த்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கற்றலும் பதவி நிலை வளர்ச்சிப் படிகளும் ஏராளம்,

1944 காத்தான்குடி முஸ்லிம் மத்திய கல்லூரியில் இணைந்து கற்றல்

1945 - 1947 ஆங்கில பாடசாலையாக அறிமுகமான கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இணைந்து ஆங்கிலக் கல்வியை ஆர்வமாகக் கற்றல்.

1947 மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் இணைதல் 

1948 - 1952 திரு. ராஜகாரியர் அதிபராக இருந்த மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் இணைதல். தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்ற  புலவர்மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளையிடம் கற்றல்.

1953 - 1954 உயர் கல்விக்காக கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து உயர்தர தராதரப்பத்திர பரீட்சையில் சித்தியடைதல்.

1955 - 1958 கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைதல். இக்கல்லூரியின் தூது கோஷ்டிகளில் பங்குபற்றி பாகிஸ்தான் செல்லுதல்.

1958 உயர்நீதிமன்ற அப்புக்காத்தாக சத்தியப்பிரமாணம்.

1958 - 1961 பிரபல சட்டத்தரணிகளான ஜி.ஜி.பொன்னம்பலம், இஸ்ஸதீன் முகம்மட், ஏ.சி.எம்.அமீர், முன்னாள் பிரதம நீதியரசர் என்.டி.என்.சமரகோன் ஆகியோருடன் கனிஷ்ட சட்டத்தரணியாக தொழில் புரிதல்.

1958 கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் மூன்றாவது புதல்வியான ஸொஹறா காரியப்பரைத் திருமணம் செய்தல்.

1964 ஐக்கிய தேசியக் கட்சியில் இணைதல். கல்முனை பட்டின சபைத் தேர்தலில் போட்டியிடுதல்.

1970 ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கல்முனைத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 955 குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் துரதிஸ்டவசமாகத் தோல்வியுறல்.

1977 ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கல்முனைத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 5547 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றஉறுப்பினராகத்தெரிவுசெய்யப்படுதல். 

பாராளுமன்றத்தின் கணக்குக்குழு, நெடுஞ்சாலைகள் ஆலோசனைக் குழு, போக்குவரத்துச் சபை ஆலோசனைக்குழு, கைத்தொழில் விஞ்ஞான அபிவிருத்தி ஆலோசனைக் குழு, கல்வி ஆலோசனை குழு, பிரதேச அபிவிருத்தி ஆலோசனைக் குழு என்பனவற்றில் இடம்பெற்றதோடு பேராதனைப் பல்கலைக்கழக செனட் சபை அங்கத்தவராகவும் நியமனம் பெறல். ஈராக், குவைத்,   பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இலங்கை தூதுக் கோஸ்டியில் இடம்பெற்று நல்லெண்ண விஜயங்களை மேற்கொள்ளல்.

1979 யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராகவும் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் நியமனம் பெறல்.

1980 ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இலங்கை தூதுக் கோஸ்டியில் இடம்பெற்று வாஷிங்டன், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று அங்குள்ள முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல்.

1981 மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றிக்கு நல்லெண்ண விஜயங்கள் மேற்கொள்ளல்.

1989 இலங்கை பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்று பாராளுமன்ற உறுப்பினராகவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது முஸ்லிம் ஒருவராக அமைச்சரவை அந்தஸ்துள்ள வர்த்தக, வாணிபத்துறை அமைச்சராகவும் நியமனம் பெறல்.

குவைத் நாட்டின்  இலங்கைத் தூதுவராகப் பதவி வகித்தல்.

இக்காலத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மிகப் பெரிய பணியினைச் செய்திருக்கிறார். குவைத் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இப்பல்கலைக்கழகத்தில் எட்டு கட்டிடங்கள் கிடைத்துள்ளன. பல்கலைக்கழக ஊழியர்களின் தங்குமிட வசதிக்கு கட்டப்பட்டுள்ள 23 தனித்தனி ஊழியர் விடுதி இல்லங்கள், இஸ்லாமிய கற்கை அறபு மொழி பீடத்தின் அழகிய புதிய கட்டிடத் தொகுதி, சுமார் ஆயிரம் மாணவர்களுக்கான  இரண்டு விடுதிக் கட்டிடங்கள், மாணவர் நலன்புரிக் கட்டிடம், பொறியியல் பீட கட்டிடத் தொகுதி, கம்பிரமான விளையாட்டரங்கு என்பன இவற்றுள் குறிப்பிட்டுக் கூறப்படவேண்டியவைகளாகும்

மிப்றாஸ் மன்சூர்
M M Mifras Mansoor






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe