29/06/2019 நேற்றைய தினம் வசந்தம் தொலைக்காட்சியில் அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் மனோகனேஷன். அங்கு தொகுப்பாளர்களால் வினவப்பட்ட வினாவுக்கு இவ்வாறு பதிலளித்தார்,
அமைச்சர் றிஷாட் பதுயுதீன் அவர்களுக்கு இங்கு நம்பிக்கை இல்லா பிரேரனை கொண்டு வரப்பட்டுள்ளது இது சம்பந்தமான உங்கள் கருத்து என்ன என்று வினாவை தொடுத்தனர், அதற்கு அமைச்சர் மனோ கனேஷன் இவ்வாறு பதிலளித்தார்,
இது முழுக்க முழுக்க அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களை மாத்திரம் குறிவைக்கவில்லை இதற்கு பிண்ணனி இனவாத அரசியல் சக்திகள் இருந்து இவைகளை இயக்குகின்றன, இதற்கான முழு நோக்கம் இனவாதத்தை தூண்டி விட்டு ஆட்சிமாற்றத்தை கொண்டு வருவதாகும், அதற்காக பாரிய முயற்சிகளை செய்து வருகின்றனர், இதுவே நிதர்சனமான உண்மை இதற்கு நாங்கள் ஒரு போதும் வழி வகுக்க மாட்டோம்.