Ads Area

அமைச்சர் றிஷாட்டை குறிவைத்து ஆட்சியை கவிழ்க்க முயல்கின்றனர் - மனோ கனேசன்.

29/06/2019 நேற்றைய தினம் வசந்தம் தொலைக்காட்சியில் அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் மனோகனேஷன். அங்கு தொகுப்பாளர்களால் வினவப்பட்ட வினாவுக்கு இவ்வாறு பதிலளித்தார், 

அமைச்சர் றிஷாட் பதுயுதீன் அவர்களுக்கு இங்கு நம்பிக்கை இல்லா பிரேரனை கொண்டு வரப்பட்டுள்ளது இது சம்பந்தமான உங்கள் கருத்து என்ன என்று வினாவை தொடுத்தனர், அதற்கு அமைச்சர் மனோ கனேஷன் இவ்வாறு பதிலளித்தார், 

அமைச்சர் றிஷாட் பதுயுதீன் அவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா பிரேரனை வெறுமனே  ஒரு கட்டுக்கதை, சோடித்த இட்டுக்கதைகளாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

இது முழுக்க முழுக்க அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களை மாத்திரம் குறிவைக்கவில்லை இதற்கு பிண்ணனி இனவாத அரசியல் சக்திகள் இருந்து இவைகளை இயக்குகின்றன, இதற்கான முழு நோக்கம் இனவாதத்தை தூண்டி விட்டு ஆட்சிமாற்றத்தை கொண்டு வருவதாகும், அதற்காக பாரிய முயற்சிகளை செய்து வருகின்றனர், இதுவே நிதர்சனமான உண்மை இதற்கு நாங்கள் ஒரு போதும் வழி வகுக்க மாட்டோம்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரனைக்கு முன்பதாக அவரை தீர விசாரிப்பதற்கு பாராளுமன்ற தெரிவிக்குழு தற்போது இயங்கி வருகிறது, அவைகள் எந்த பக்க சார்பும் இல்லாமல் இயங்கி வரும், அதில் கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் நிச்சயமாக குற்றமற்றவர் என்று நிறுபிப்பார். அவரிடம் எந்த தவறும் இல்லை இவை அனைத்தும் ஆட்சியை கவிழ்க்க செய்யும் முயற்சி, அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா பிரேரனைக்கு நாங்கள் நேர்மையான முடிவை எடுப்போம் என அவர் பதிலளித்தார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe