Ads Area

முஸ்லிம்களை கல்லெரிந்து கொல்ல வேண்டுமென அஸ்கிரிய தேரர் கூறிய கருத்தை அவர் வாபஸ் பெற வேண்டும்.

முஸ்­லிம்கள் தொடர்பில் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர் தெரி­வித்­துள்ள சர்ச்­சைக்­கு­ரிய கருத்­தினை அவர் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும் அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் நேற்று தெரிவித்திருந்தார்.

“முஸ்லிம்கள் சிங்கள மக்களை அழிக்க எடுத்த செயற்பாடுகள் இப்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளன.எனது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர் ஒருவர் லட்சக்கணக்கான எமது குழந்தைகளை இல்லாமலாக்கியுள்ளார்.

இப்படியான சிங்கள இனத்தை அழிக்க நினைக்கும் தேசத்துரோகிகளை கல்லால் அடித்து கொல்ல வேண்டுமென பலர் என்னிடம் கூறினர். அப்படி செய்யுங்கள் என நான் கூற மாட்டேன்.

ஆனால் செய்யப்பட வேண்டியது அது தான். நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவர்களை மட்டும் மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe