Ads Area

பட்டியால் இறந்த 11 மாத குழந்தை விடையத்தில் 5 பேரின் பதவியை தடை செய்ய உத்தரவு.

திஸ்ஸமகாரம பிரதேசத்தில் 11 மாத குழந்தை ஒன்று உண்ண உணவில்லாமல் இறந்த சம்பவம் தொடர்பில் 5 அரச அதிகாரிகளின் பதவியைத் தடை செய்யுமாறு, ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது, ஜியாஜபுர கிரமா சேவகர் பிரிவுக்குப் பொறுப்பான ஐந்து அரச அதிகாரிகளின் பதவிகளைத் தடை செய்யுமாறு தான் மாவட்டச் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமகாரம, ஜியாஜபுர பிரதேசத்தைச் சேர்ந்த மலித் வீரசிங்க எனும் 11 மாதக் குழந்தையே கடந்த மே மாதம் 14ஆம் திகதி உண்ண உணவில்லாமல் பட்டினியால் உயிரிழந்துள்ளார்.

இக் குழந்தைக்கு மேலும் மூன்று சகோதரர்கள் காணப்படுகின்றனர். என்றாலும் குறித்த குடும்பத்திற்கு சமூர்த்தி திட்டத்தை வழங்க, பிரதேச சமூர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை முன்னெடுத்தபோதும், குடும்பத் தலைவரான குழந்தையின் தந்தை சமூர்த்தி திட்டத்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்காதன் காரணமாக அதனை வழங்க முடியாமல் போனதாகத் தெரியவந்துள்ளது.

இருந்தபோதும், நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் குறித்த குழந்தையின் மரணம் தொடர்பில் விவாதங்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Daily Ceylon)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe