திஸ்ஸமகாரம பிரதேசத்தில் 11 மாத குழந்தை ஒன்று உண்ண உணவில்லாமல் இறந்து உள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலித் வீரசிங்க என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாகும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே இந்தக் குழந்தை மரணித்துள்ளதாக, மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும், உயிரோடு உள்ள மூன்று பிள்ளைகளில் இருவர் பாடசாலைக்கு செல்வதாகவும், ஒருவர் முன்பள்ளிக்கு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 11 மாத குழந்தை உணவில்லாமல் இறந்தது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஹம்பாந்தோட்ட மாவட்ட செயலாளருக்கு ராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி அறிவுறுத்தியுள்ளார்.
Thanks - DailyCeylon.