A guy in Khobar filled his trunk with water bottles and ice and distributed it among workers on the street.
வளைகுடா நாடுகளில் தற்போது சூடான காலநிலை நிலவுகிறது கட்டார், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் 44-48-50 என்ற ரீதியில் அதிகரித்த வெப்ப நிலை நிலவுகிறது.
சில நாடுகளில் நேரடி சூரிய வெப்பத்தில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க பகல் 12 முதல் 3 மணி வரையான நேரப் பகுதியில் வெளியில் வேலை செய்யவது தடை என அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் பல நல்ல உள்ளங்கள் வெயிலில் வாடும் மக்களுக்கு தண்ணீர்ப் போத்தல்களை வழங்கி அவர்களின் தாகம் தீர்ப்பதுண்டு அந்த வகையில் சவுதி அரேபிய அல்-கோபர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வாணம் முழுக்க தண்ணீர்ப் போத்தல்களை நிரப்பிக் கொண்டு பாதசாரிகள், வெளியில் இருப்போர்கள் என பலருக்கும் தண்ணீர் வழங்கி வருவது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.