தகவல் - Dr Ziyad Aia
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை (Kidney Transplant) செய்த நோயாளிகளை பார்வையிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?
பொதுவாக பெரிய சத்திர சிகிச்சைகள் (Major Surgeries) மேற்கொள்ளப்படும் போது அதன் பின்னரான கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதில் ஒன்றுதான் பார்வையாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல்.
இருப்பினும் உடலானது புதிய சிறுநீரகத்தை பிற பொருளாக (Foreign Body யாக) கருதி எதிர்க்கத் தொடங்கும். (Tissue Rejection) இந்த எதிர்ப்பை தடுப்பதற்கே சத்திரசிகிச்சையின் பின் Immuno Suppressant எனும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
ஆனால் இங்கு எமக்குத் தேவையான சிறுநீரகத்தை அந்த எதிர்வினையில் இருந்து பாதுகாக்கவே Immuno suppressant எனும் ஊசிகள் போடப்படுகின்றன. இதனால் உடலின் ஏனைய நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியும் குறைவடைகிறது. இதனால் சிறிய ஒரு நோய் தொற்றும் பாரிய நோய்களை உருவாக்கலாம்.
ஆகவே நலம் விசாரிப்பதாக எண்ணி சிறுநீரக நோயாளர்களை பார்வையிடுவதை முற்றுமுழுதாக தவிர்த்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்.