Ads Area

தெகிவளையில் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்ததால் குத்திக் கொல்லப்பட்ட அப்துல் அஸீஸ்.

அஸ்ரப் சமட்.

பட்டப் பகலில் இனம் தெரியாத நபா் தெகிவளையில் உள்ள முஸ்லிம் காட்வெயாா் உரிமையாளரிடம் கப்பம் கேட்டுள்ளாா் கொடுக்க மறுத்தால் கடை உரிமையளரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளாா். 

இச் சம்பவம் - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் உள்ள காலி வீதியில் இடம் பெற்றுள்ளது.  இதில் ஜெயலங்கா காட்வெயா உரிமையாளரான அப்துல் அசீஸ் வயது 60 என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளாா். 

இச் சம்பவம் இன்று 24 - பகல் 3 மணிக்கு நடைபெற்றுள்ளது. தெகிவளை பொலிசாா் விசாரனைகளை மேற் கொண்டு வருகின்றனா். அப்துல் அசீஸி களுபோவிலை வைத்தியசாலையில் கொண்டு செல்லும் போதே மரணித்துள்ளார். 

சம்பவம் நடைபெற்ற நேரத்திலேயே அவர் தனியாகவே காட்வெயரில் இருந்துள்ளாா். கப்பம் கேட்டவா் உடன் கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பியோடியதாகவும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அவா் கடையில் கதறியிருக்கின்றாா். அதன் பின்னரே அவரை வைத்தியசாலையில் கொண்டு சென்றுள்ளனா்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe