தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹம்மட் முஸம்மிலை ஜூலை மாதம் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் உத்தரவுவிட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.