Ads Area

உணவை விழுங்கி உண்ண முடியாது அவதிப்பட்டவருக்கு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் செய்யப்பட்ட சிறப்பான சிகிச்சை.

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் Percutaneous Endoscopic Gastrostomy (PEG Tube) மூலம் நிரந்தர உணவூட்டல் ஏற்பாடு..!

உணவை விழுங்கி உண்ண முடியாது அவதிப்பட்டவருக்கு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் செய்யப்பட்ட சிறப்பான சேவை. 

நிழலின் அருமை வெயிலில் தெரியுமென்பார்கள். அதாவது இறைவனின் அருள் அது இருக்கும் போது தெரிவதில்லை. இறைவனின் சில அருள்கள் கிடைக்காத போதுதான் அது வேதனையாகின்றது. இறைவனின் அருளை விலை கொடுத்து வாங்க முடியாது. நமது உடலில் உள்ள உறுப்புகளும் அதன் தொழிற்பாடுகளும் மிகவும் பெறுமதி வாய்ந்த பேரருளாகும்.

நாம் ஒவ்வொரு நொடியும் இறைவன் தந்த அருளுக்காக நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மூன்று மாதத்திற்கு முன்பு 75 வயதுடைய நோயாளி ஒருவர் பாரிசதவாதத்தினால் பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை. சுவாசத்தில் வைக்கப்பட்டு பின்பு தொண்டைப் பகுதியில் செயற்கைச் சுவாசக் குழாய் (Tracheostomy tube) பொருத்தப்பட்டு அவருடைய சுவாசத்தை சுயமாக சுவாசிக்கும் வேளையில் அவருக்கு பாரிசவாதம் வந்ததிலிருந்து விழுங்க முடியாமல் இருப்பதால் உணவை உட்கொள்வது சிரமமாகும்.

அவருக்கு தொடர்ந்தும் விழுங்குவது சிரமமாக இருப்பதனால் நிரந்தரமான உணவூட்டும் வழியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக உயர்ந்த செயற்பாடான Advanced Procedure) Endoscopy யின் உதவியுடன் இரைப்பையில் உணவு ஊட்டுவதற்கான குழாயொன்று நிரந்தரமாக பொருத்தப்பட்டு அந் நோயாளிக்கு உணவை உட்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சந்தர்ப்பத்தை  தந்த இறைவனுக்கே புகழ் அனை‌த்து‌ம் 

இச்சத்திர சிகிச்சைக்கு உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு, வைத்திய அத்தியட்சகர் Dr ALF Rahman அவர்களுக்கும் நன்றிகள்.

Dr.Sameem




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe