இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட குண்டுத் தாக்குதலின் பின் பேரினவாத சக்திகளினால் இலங்கை முஸ்லிம்கள் நாளாந்தம் பல இன்னல்களுக்கு உட்பட்டு வருகின்றார்கள் இஸ்லாம்-முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட அத்தனை விடையங்களிலும் கைபோட்டு நோட்டிப் பார்க்கின்றார்கள், இனவாதிகள் இலங்கை முஸ்லிம்களை மட்டும் குறி வைக்காமல் இலங்கைக்கு பல வகையிலும் உதவி செய்து வரும் சவுதி அரேபியாவையும் விமர்சிப்பதற்கும் அவர்கள் பின்வாங்கவில்லை.
இலங்கைக்கு நிதி உதவி முதற் கொண்டு பல்வேறு சேவைகளையும், அன்பளிப்புக்களையும் தொடர்ந்து செய்து இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சவுதி அரேபியாவையும், அரபு எழுத்துக்களையும் இனவாதிகள் விமர்சிப்பதற்கு முன் சவுதி அரேபியா இலங்கைக்கு வாரி வழங்கி வரும் உதவிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
சவுதி அரசாங்கம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும் நல்லாட்சி அரசாங்கத்திலும் சாதி மத இன வேறுபாடு பாராது ஆசிய நாடுகளில் இலங்கைக்கு மட்டும் பாரிய நிதி உதிவிகளைச் செய்து வருகின்றது.
அதோடு சவுதி அபிவிருத்தி நிதியம் கடந்த 2017ல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காக்கை வலிக்காக சகல வசதிகளும் உள்ளடக்கிய 8 மாடிகளைக் கொண்ட கட்டத்தினை 4000 மில்லியன் ருபா செலவில் நிர்மாணித்துக் கொடுத்துள்ளது.
அதே போன்று, முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரப் அவா்களின் வேண்டுகோளின் பேரில் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் 500 வீடுகள், வைத்தியசாலை பள்ளிவாசல் சமுக நிலையம் போன்ற பாரிய திட்டத்திற்கு நிதி வழங்கி நிர்மாணித்துள்ளது,
இலங்கை வரலாற்றிலேயே நெடும் பாலமான கின்னியா பாலம் அமைப்பதற்காக சவுதி அரசாங்கம் நிதி உதவி வழங்கியுள்ளது.
இதேவேளை, கடந்த 30 வருடங்களுக்கு மேலாக 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் சவுதியில் தொழில் செய்து இலங்கையின் பொருளாதாரத்தில் 8 வீதத்தினை அன்நியச் செலாவானியை அனுப்புகின்றனர்.
அதுமட்டும் அல்லாமல் மட்டக்களப்பு கெம்பஸ் ,கின்னியா திருமலை பிரதேசங்கள் விவசாய குளங்கள் மீள் அமைக்கும் திட்டத்தினை திருமலை பா. உ, தௌபிக் எம்.பியின் முயற்சியிலும் ,திருமலை மாவட்டத்தில் ஒர் தொழில் நுட்ப பயிற்சிக் கல்லூரிக்கு சவுதி அரசாங்கம் நிதி வழங்க உள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகள் என பல்வேறு வகையில் இலங்கைக்கு சவுதி அரசு உதவுகின்றதோடு எரிபொருளை ஒரு மாணிய அடிப்படையில் குறைந்த் விலையில் சிங்கப்புர் ஊடாக இலங்கைக்கு சவுதி வழங்குகின்றது.
அதே போன்று வருடா வரும் டொன் கணக்கில் பேரீச்சம் பழங்களையும் இலவசமாக சவுதி அரேபியா வழங்கி வருகின்றது தற்போது கூட 150 மெட்ரிக் டொன் பேரீச்சம் வழங்களை இலவசமாக வழங்கியுள்ளது.
அதே போன்று வருடா வரும் டொன் கணக்கில் பேரீச்சம் பழங்களையும் இலவசமாக சவுதி அரேபியா வழங்கி வருகின்றது தற்போது கூட 150 மெட்ரிக் டொன் பேரீச்சம் வழங்களை இலவசமாக வழங்கியுள்ளது.