1915 ம் ஆண்டு கண்டிக் கலவரத்தில் கைது செய்யப்பட்ட சிங்கள கலகக்காரர்களை குற்றமற்றவர்கள் என்றும் அப்பாவிகள் என்றும் கூறி விடுதலை உத்தரவைப் பெற்றுவர முதலாம் உலகமகா யுத்தக்காலமான அக்காலப்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இங்கிலாந்து சென்று அன்றய பிரித்தானிய முடியினைச் சந்தித்த இராணி வழக்குரைஞ்சர் சேர் பொன்னம்பலம் இராமநாதனை அன்றய சிங்களப்பெருந்தேசியவாதிகள் குதிரை வண்டியில் ஏற்றி அவர்களே வடம் பிடித்து இழுத்து வந்த வரலாறு இன்று இன்னுமொரு விதத்தில் நினைவூட்டப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலையும் அதன் போராட்ட பாரம்பரியத்தையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு மாறாத வடுவை ஏற்படுத்திய எட்டப்பர்கள் அவர்களது சுயலாப அரசியல் எழுச்சிகளுக்காக அப்பாவித்த தமிழ் மக்களை ஏமாற்றி அவர்கள் விரும்பிய சுகபோக வாழ்க்கை ஒன்றை அடைந்து கொள்ளும் திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்கும் முயற்சிகளை விட்டு அரசாங்கத்தின் கவனத்தினைத் திருப்பி தீர்வுக்கான வழிகளை நிரந்தரமாக அடைத்துவிடும் உபாயம் இதுவென்பதை அப்பாவித்த தமிழ் மக்கள் அறியாமல் இருப்பது அபத்தம்.
இணைந்த வடக்கு கிழக்குக்குள் தங்களுக்கான சுயாட்சிக்கான அலகைக் கேட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் இனிமேல் வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் ஆதரவு தரப்போவது இல்லை.
இனப்பிரச்சினைக்கான தீர்வாக வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சி மாகாணம் கேட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தயவின்றி அதனை எவ்வாறு சாதிக்கப் போகிறது.
தமிழ் மக்களை அவர்களது போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் சமயம்பார்த்து குள்ளநரித்தனமாக முன்னெடுத்திருக்கும் கல்முனை விவகாரமானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் பிரபாகரனின் சடலத்தின் மீது எட்டி உதைத்தவர்களும் கொத்திப் பிளந்தவர்களும் அரை அமைச்சர் பதவிகளுக்காக இனப்படுகொலைச் சூத்திரதாரிகள் என தமிழ் மக்கள் தூற்றி கழிப்பவர்களுடன் சோரம் போனவர்களும் தமிழ் மக்கள் உரிமைக்காக உண்ணாவிரதமிருப்பது வேடிக்கை இல்லையா.. 😊
ஓன்று மட்டும் நிச்சயம்....! தமிழ் மக்களை தந்தை செல்வா சொன்னது போன்று கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்...!!
தமிழ் முஸ்லீம் ஐக்கியம் பற்றி யோசிப்போம் வெற்றி பெறுவோம்...!
முஹம்மட் றனுாஸ்
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்
சம்மாந்துறை.