எம்மை நாமே ஆளும் நகரசபை போராட்டத்தை நாமே ஆரம்பித்தோம். அன்று நான் மாகாணசபையில் தனிநபர் பிரேரணையை சகல சக்திகளையும் எதிர்த்து கொன்றுசென்று சாதித்தேன். அதனை தொடர்ந்து நகரசபை போராட்டத்தை நமது மக்கள் ஆரம்பித்த போது கட்சிகளை கடந்து போராட்டத்தை மதித்து எனது கட்சியின் ஆதரவாளர்கள், அமைப்பாளர்கள்,மற்றும் எனது நண்பர்களை அனுப்பிவைத்தேன். அந்த போராட்டம் புத்துணர்வுடன் முன்னெடுக்கப்பட்டது என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் குழுத்தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
நான் பிறந்த பிரதேசத்தை சுயநலங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க நான் விடமாட்டேன். யாருக்கும் நான் அஞ்சவோ அல்லது கெஞ்சவோ மாட்டேன். அரசியலுக்கு வருவது எனது நிலைப்பாடாக அன்றும் இருந்ததில்லை இன்றும் இருக்கவில்லை. யாரையும் தேவையில்லாமல் விமர்சிக்க எனக்கு உடன்பாடு இல்லை . எனது அனுபவங்கள் மூலம் எனது பிரதேச இளைஞர் தலைவர்களை நான் எப்போதும் சரியாக நெறிப்படுத்தி வழிகாட்ட தயாராக இருக்கிறேன். எமது சமூகத்தை பிழையாக வழிநடத்துபவர்களை விடக்கூடாது. எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் நான் இந்த பிரதேசத்தின் வேட்பாளராக களமிறங்க தயாராகவுள்ளேன்.
இந்நிகழ்வில் கல்முனை மற்றும் காரைதீவு சபைகளின் உறுப்பினர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர். வெற்றியீட்டியவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
நூருல் ஹுதா உமர்
(எமது நிருபர்)