Ads Area

கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் இலவச அம்பியுலன்ஸ் சேவை ஆரம்பித்து வைப்பு.

தகவல் - அஸ்லம்

கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் இலவச அம்பியுலன்ஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேசத்தில் எப்பிரதேசங்களில் இருந்தும் மக்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும்  அதற்காக நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 1990 என்ற இலக்கத்தை அழைத்து சரியான விலாசத்தை சொல்லுமிடத்து அடுத்த நொடிப் பொழுதில் உங்களை நோக்கி வருவார்கள்.மருத்துவ வசதிகள் யாவும் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக 24 மணிநேரமும் இயங்கும் சேவையை பொது மக்கள் பாவனைக்காக அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளது நீண்ட காலமாக இருந்து வந்த மக்கள் குரை இன்றுடன் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இனி ஒவ்வொரு வீட்டிலும் எழுதி வைக்கப்பட வேண்டிய இலக்கம் - 1990 அழைப்புகள் யாவும் இலவசம் தொலைபேசியில் பணம் இல்லாவிடினும் அழைப்பு மேற்கொள்ள முடியும் .இலவசமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்தச் சேவையின் மூலமான பயன்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். 

வைத்தியசாலைக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் நோயாளருக்கு தேவையான துரித சிகிச்சையை வழங்குவதற்கான பணியாளர்களும் இந்த அம்பியுலன்ஸ் சேவையில் ஈடுபடுவுள்தாம்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe