-அப்துல் சலாம் யாசீம்-
திருகோணமலை ஐயசுமநாராம விகாரைக்கு இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பு நிதியுதவி.
பொஷன் தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகரிலுள்ள பிரபல விகாரையான ஐயசுமநாராம விகாரைக்கு இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பு நிதியுதவி வழங்கியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இன ஒற்றுமையை மேலோங்கச் செய்ய வேண்டும். தமிழ், முஸ்லிம், சிங்களம் என வேறுபாடு இருக்கக்கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் இஸ்லாமிய வர்த்தக நல அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.