Ads Area

சம்மாந்துறை மு.ம.ம.வித்தியாலயத்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்.

முஹம்மட் றிஸ்வான் (ஆசிரியர்)

சம்மாந்துறை மு.ம.ம.வித்தியாலயத்தில் இவ்வருடம் க.பொ.த.சா.தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒன்று கூடல் நிகழ்வு அதிபரின் தலைமையில் (27.06.2019) இடம் பெற்றது .

இந்நிகழ்வில் சம்மாந்துறை கல்வி வலய நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் A.S.அஹமட் கியாஸ் அவர்களும், சம்மாந்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் MA .சபூர்தம்பி  அவர்களும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் 1ம் தவணை பரீட்சையில் 9A,8A சித்திகளை பெற்ற 35 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் ஏனைய மாணவர்களின் பெற்றோர்களிடம் தவணை பரீட்சை முடிவுகள் வழங்கி வைக்கப்பட்டது.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe