Ads Area

நிறம் தீட்டும் போட்டியில் வெற்றியீட்டிய சம்மாந்துறை மிfப்தா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.

நிறம் தீட்டும் போட்டியில் வெற்றியீட்டிய சம்மாந்துறை மிfப்தா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு. 

கடந்த 2018 ல் தமிழா ஊடக வலையமைப்பினால் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள பாலர் பாடசாலை மாணவர்களுக்கான நிறம் தீட்டும் போட்டி நடாத்தப்பட்டது. 

அதில் கலந்து திறமையை வெளிப்படுத்திய பாலர் பாடசாலை மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது. இதன் போது நிறம் தீட்டும் போட்டியில் வெற்றியீ்டிய மிfப்தா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு  பிரஸ்தம் பிறைவெட் லிமிட்டட் நிறுவனத்தினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும், பிரெஸ்தம் நிறுவனத்தின் நிறை வேற்று அதிகாரியுமான எஸ்.எம். ஜெலீஸ் அவர்கள் வெற்றியீட்டிய மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe