வி.ரி.சகாதேவராஜா-
கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக்கோரி நடாத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் கடந்தவாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இப்போராட்டம் பல செய்திகளைச் சொல்லுகின்றது.
சாத்வீகவழியில் யாழ்ப்பாணத்தில் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து 11ஆவது நாள் உயிர்நீத்த வரலாற்றை உலகமறியும்.அது ஒரு வரலாறு.
அதன்பின்னர் பிற்பாடு வடக்கு கிழக்கில் நடைபெற்ற முதலாவது சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் இது.
இவர்களில் பௌத்தமதகுருவான வண.சங்கரத்ன தேரர் முதன்மைப்படுத்தப்பட்டார். எங்கோ ஒரு இனத்தில் பிறந்து வேறுமொழியைப்பேசுகின்ற ஒருவர் மற்றொரு பின்தள்ளப்பட்ட சகோதர இனத்திற்காக உண்ணாவிரதமிருப்பதென்பதே அதற்கான காரணமாகும்.
அன்று அதே கல்முனை சுபத்ரா ராமாய விகாரையில் முன்பிருந்த மதகுரு வண.மிதிசேன மஹாநாம தேரர் கல்முனையில்2000.03.20இல் மேற்கொண்ட தமிழர்உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டிருக்க இன்று அவர்பின்வந்த கடவத்தை ரண்முத்துகலையைச்சேர்ந்த வண.சங்கரத்ன தேரர் கடந்தவாரம் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் முக்கிய புள்ளியாக பலரது கவனத்தையும்ஈர்த்து இறுதிவரை கலந்துகொண்டதும் ஒரு வரலாறுதான்.
தீர்வு?
கடந்த செவ்வாய்க்கிழமைக்கு(25) முதல் அங்கொரு கணக்காளர் நியமிக்கப்படுவார் என எழுத்துமூல உள்ளுராட்சிஅமைச்சரின் அறிவிப்பு வெளியாகியிருந்தும் அன்று நியமிக்கப்படவில்லை.
அன்றுமாலை நடந்த அமைச்சரவையில் அமைச்சர் மனோகணேசன் முழங்கியருக்கிறார். அடுத்தவாரம் அனைத்துத்தரப்பினரையும் அழைத்துப்பேசி தீர்வு காணவிருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே மீண்டும் குழுவை நியமித்து காலத்தைக்கடத்தி மீண்டும் இதனை இழுத்தடித்துவிடுவார்களோ என்ற ஜயப்பாடு கல்முனை தமிழ்மக்கள் மத்தியில் தற்போது பரவலாக எழுந்துள்ளதைக்காணக்கூடியதாயுள்ளது.
கல்முனைவடக்கிற்கான போராட்டவரலாறு!
கல்முனை வடக்குப்பிரதேச செயலகத்திற்கான போராட்டம் நடாத்தப்படுவது இது முதற்றடவையல்ல. உண்மையில் கடந்தகாலங்களில் 3 தடவைகள்; ஏலவே போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்தவேளையில் அம்பாறை மாவட்ட தமிழர்மகாசங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகவிருந்த சின்னத்துரை(நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்) அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரங்கநாயகி பத்மநாதனின் உதவியுடன் அமைச்சர் ரஞ்சனிடம் கல்முனை தமிழ் உதவிஅரசஅதிபர் பிரிவு தொடர்பான கோரிக்கையை முன்வைத்தார்.
அன்றிருந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கே.டபிள்யு.தேவநாயகத்திடம் இக்கோரிக்கை சென்றடைந்ததும் அவர் நடவடிக்கை எடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உடனடியாக கல்முனையில் சுற்றுலாஅலுவலகத்தை(ஊசைஉரவை ழுககiஉந) நிறுவுமாறு உத்தரவிட்டார்.
ஆனால் இது அமுலுக்கு வரவில்லை.எதுவுமே நடக்கவில்லை.இதுவே முதலாவது போராட்டத்திற்கான அடித்தளம்.
முதலாவது போராட்டம்!
1989இல் பொதுத்தேர்தல் முடிந்த கையோடு அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்க துணைத்தலைவர் பாண்டியூரான் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப்போராட்டம் முதலாவது போராட்டமாகும்.
இந்த சாத்வீகவழியிலான உண்ணாவிரதப்போராட்டத்தையடுத்து அப்போதைய பொதுநிருவாக அமைச்சர் யு.பி.விஜேகோன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் ( தயாரத்னா அஸ்ரப் கலப்பதி திவ்வியநாதன் போன்றோர்) த.வி.கூ.தலைவர் அ.அமிர்தலிங்கத்தையும் அழைத்து கொழும்பில் பேச்சுவார்த்தை நடாத்தினார். அங்கு எடுக்கப்பட்டதீர்மானத்தின்படி 1989.4.12இல் கல்முனை வடக்கிற்கான உப அலுவலகம் திறக்கப்பட்டது.
இரண்டாவது போராட்டம் 2000இல்..
அதனைத்தரமுயர்த்தவேண்டுமெனக்கோரி 2000.03.20இல் கல்முனையிலுள்ள 50தமிழர்பொதுநல அமைப்புகள் இணைந்து உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்தது. இதில் சுமார் 1500மக்கள் கலந்துகொண்டனர்.
தமிழர்மகாசங்கத்தின் தலைவர் கே.சுப்பிரமணியம் செயலாளர் சிவஸ்ரீ சிவஞானசெல்வக்குருக்கள் த.மகேஸ்வரன் கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.மிதிசேன மகாநாம காசுபதி தெய்வநாயகம் அன்னம்மா லோகநாதன் சுனில் போன்ற பல முக்கிய பிரமுகர்கள் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.
3ஆம் கட்டப்போராட்டம்!
அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாதமையினால் மீண்டும் 2001.1.24இல்கல்முனையிலுள்ள கிராமஅபிவிருத்திச்சங்கங்கள் இணைந்து உண்ணாவிரதப்பேராட்டமொன்றை முன்னெடுத்தன. அது உக்கிரமாக முன்னெடுக்கப்பட்டவேளை ஏழாம் நாள் 31.01.2001இல் மட்டு.மாவட்ட த..வி.கூ. பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா உரிய தீர்வைத்தான் பெற்றுத்தருவதாக உறுதியளித்தமையைத்தொடர்ந்து அவ்வுண்ணாவிரதம் கைவிடப்பட்டது.கல்முனை வடக்கு
உபசெயலகமா? பிரதேசசெயலகமா?
தற்போது பேசுபொருளாகவிருக்கின்ற நிருவாக அலகு பிரதேச செயலகமா? அல்லது உப
பிரதேசசெயலகமா? கல்முனை வடக்கு உபபிரதேச செயலகமா? கல்முனை தமிழ் உபபிரதேச
செயலகமா? கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகமா? என்பதில் பலருக்கு
மயக்கமிருக்கிறது.
ஏனெனில் கடந்த ஒருவாரகாலப்பகுதியில் உண்ணாவிரத்தின்போது வருகைதந்த
அரசியல்வாதிகள் முதல் ஊடகர்கள் வரை இவ்விரு சொற்றொடர்களையும் பரவலாக
பாவித்துவந்திருக்கின்றனர்.
உண்மையில் 12.04.1989 இல் உருவான கல்முனை வடக்கு (தமிழ்) உப பிரதேச
செயலகம் என்பது முன்னாள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் காலஞ்சென்ற கே.
டபிள்யூ தேநாயகம் அவர்கள் அப்போதைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு
வழங்கிய பணிப்புரையின் படியும் பின்னர் 1989 பெப்ரவரி பாராளுமன்றப் பொதுத்
தேர்தலின் பின்னர் இது விடயமாக முன்னாள் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள்
அமைச்சர் யூ. பி. விஜயகோனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தீர்மானத்தின்படியுமே
உருவாக்கப்பட்டது.
இதுவே நடந்த உண்மையாகும். இப்படியிருக்கும்போது முப்பது வருடங்களும் கழிந்த
பின்னர் இப்பிரதேச செயலகத்தின் உருவாக்கம் சட்டவிரோதமானது என
முஸ்லிம்தரப்புக்கூறுவது கூறுவது ‘மதியீனம்’ ஆகும் என தமிழ்த்தரப்பினர்
கூறுகின்றனர்.
அப்படியானால் முன்னாள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே.டபிள்யு தேவநாயகத்தின் பணிப்புரையும்இ முன்னாள் பொது நிருவாக உள்நாட்டு அமைச்சர் யூ. பி. விஜயகோனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானமும் பின்னர் 1993 இல் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானமும் சட்ட விரோதமானவையா? என்றும் நோக்கர்கள் வினவுகின்றனர்.
எனவே இச்செயலகத்தை காணி மற்றும் நிதிஅதிகாரமிக்கதான முழுஅதிகாரமுடைய பிரதேசசெயலகமாக மாற்றி தரமுயர்த்திதரவேண்டும் என்பது தமிழ்மக்களின் கோரிக்கையாகும்.
அண்மையில் அரசின்பிரதிநிதியாக சொப்பரில் உண்ணாவிரத்தத்த்ற்குவந்த சுமந்திரன் எம்.பிகூட இது என்றோ தரமுயர்த்தப்பட்டுவிட்டது.அதை தரமுயர்த்தவேண்டிய அவசியமில்லை. ஆக காணி நிதி அதிகாரம் மட்டுமே வழங்கப்படவேண்டும் என்று பேசியிருந்தார்.
அப்படியெனின் பிரதேசசெயலகமாக எப்போது தரமுயர்த்தப்பட்டது? சரிஅப்படித் தரமுயர்த்தியிருந்தால் ஏன் காணி மற்றும் நிதி அதிகாரங்கள் வழங்கப்படவில்லை? மேலும் கூறப்போனால் தரமுயர்த்தித்தரும்படி இந்த சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் எதற்கு? என்றெல்லாம் கேள்விகள் எழலாமல்லவா.
ஆரம்பத்தில் தமிழ் உபபிரதேசசெலயகம் என்று அழைக்கப்பட்டுவந்த இவ்வலகு பின்னர் வடக்கு உப அலுவலகம் என அழைக்கப்பட்டது. மூவினங்களும் உள்ளதால் தமிழ் என்று வராமல் பொதுவான வடக்கு என்ற பெயருடன் அழைக்க ஆரம்பித்தார்கள்.
ஆக இது ‘கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம்’ என்பதே சரியான சொற்றொடராகும். ஏனெனில் எந்தக்காலகட்டத்திலும் இது பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படவில்லையென்பது கசப்பான உண்மை.தமிழருக்கு மட்டுமான செயலகமா?
இது தனித்தமிழ் செயலகமல்ல.இதற்குள் தமிழர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்கள் வருகிறார்கள். எனவே மூவினத்திற்கும் சொந்தமான செயலகம் எனக்கூறப்படுகிறது. 9798குடும்பங்களைச்சேர்ந்த 36346சனத்தொகையைக்கொண்டது.
இதற்குள் 33007தமிழ்மக்களும் 3215முஸ்லிம்மக்களும் 124 சிங்களமக்களுமுள்ளனர். மேலும் இவை நிலத்தொடர்புள்ளவகையில் உள்ளன என்றும் வரைபடம் சுட்டுகின்றது. ஆக 15.77சதுரமீற்றர் பரப்பளவைக்கொண்ட இவ்வடக்கு பிரதேசம்
மதஅடிப்படையில்பார்த்தால் இந்துக்கள் 30205பேரும் இஸ்லாமியர்கள் 3215பேரும் கிறிஸ்தவர்கள் 2802பேரும் 124பௌத்தர்களும் உள்ளனர். இந்துஆலயங்கள் 45உள்ளன.கிறிஸ்தவ தேவாலயங்கள் 12உம் பள்ளிவாசல்கள் 3உம் பௌத்தவிகாரையொன்றும் உள்ளன.
இவ்வாறு 12.04.1989 இல் ஏற்படுத்தப்பெற்ற கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம்தான் இன்றுவரை கடந்தமுப்பது வருடகாலமாகப் பெயரளவில் 29 தமிழ்ப் பெரும்பான்மைக் கிராமசேவகர்களுடன் இயங்;கிக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம்தரப்பு வாதம்!
இதேவேளை முஸ்லிம் தரப்பினர் கடந்த 30வருடகாலமாக இக்கோரிக்கைக்குத் தடையாக இருந்துவருகின்றார்கள் என்பது வெளிப்படையாகக்கூறப்பட்டது. அதற்கு அண்மையில் நடந்த முஸ்லிம்களின் சத்தியாக்கிரகப்போராட்டமும் சாட்சியாகவுள்ளது.
அவர்களது பார்வையில் இது நிலத்தொடர்பற்றதும் இனரீதியானதுமாகும் என்பது பிரதான குற்றச்சாட்டாகும். எம்முடன்பேசாமல் கல்முனை நகரை தானாக கைப்பற்றநினைக்கிறார்கள் என்று கருதுகிறார்கள்.
கல்முனை மாநகரம் எங்களுடையது.காலாகாலமாக தாங்கள்தான் வர்த்தகம்செய்துவருகிறோம் எனவே அது எமக்குத்தான் சொந்தம்.எனவே அதனை விட்டுக்கொடுக்கமுடியாது என்பதும் ஒரு வாதம். எனவே அதனைப்பேசித் தீர்க்கவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
கல்முனை நகர் ?
கல்முனை நகர் 1892இல் 100வீதம் தமிழர்களோடு இருந்ததையும் பின்னர் 1946இல் கல்முனைக்குடியை இணைத்து கல்முனைபட்டினசபையாக மாறியது. எனவே இன்று நிலைமை மாறிவிட்டது
அதேபோன்று கொழும்பு மாநகரில் யாரும்கடைவைக்கலாம்.மூவினத்தவரும் கடைவைத்துள்ளனர். அதற்காக கொழும்பு எமக்குரியது என்று சொந்தம்கொண்டாடலாமா? அது கொழும்பு மாநகரசபைக்குரியது அந்தப்பிரதேச செயலகத்துக்குரியது என்று அர்த்தம் கற்பிக்கிறார்கள் தமிழ்த்தரப்பினர்.
அதேபோன்றுதான் தரவைப்பிள்ளையாhர் ஆலயம் தொடக்கம் பெரியநீலாவணை வரைகல்முனை வடக்குப்பிரதேசம் என்றால் அதற்குள்வரும் அத்தனையும் அப்பிரதேசத்திற்குரியதுதான்.
கல்முனை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றபோதிலும் அவர்களோ அல்லது வடக்குப்பிரிவிற்குட்பட்ட முஸ்லிம்களோ நகருக்கு பூர்வீக குடிகளல்ல ஆக வர்த்தக நோக்கங்களுக்காக வந்த முஸ்லிம்களே அவர்கள். ஆக தமிழர்களே பூர்வீககுடிகள் என மூத்த த.அ.கட்சி அரசியல் பிரமுகர்(86) கு.ஏகாம்பரம் கூறுகிறார்.
இதேபோன்று தனித்தமிழ்ப்பிரிவில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப்பினால் தனிமுஸ்லிம்களைக்குடியேற்றி இஸ்லாமாபாத்என்று பெயரிட்டனர். வேண்டுமென்றே தமிழர் செறிவைக்குறைக்க அவர்கள் திட்டமிட்டுச்செயற்பட்டனர் என்பதே எனது கருத்தாகும் என அவர் மேலும்சொன்னார்.
கல்முனையின் பூர்வீகம்!
கல்முனைப்பட்டினம் 1892ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் சுகாதாரநலனோம்புசபை(Sanitary Board.- சனிற்றறி வோட்)என்ற உள்ளுர்அதிகாரசபையாக உருவானது. இந்த சபையில் கல்முனை 1 கல்முனை 2 கல்முனை 3 ஆகிய 3பிரிவுகள் உள்ளடக்கப்பட்டன. இது முழுக்கமுழுக்க தமிழ்மக்களை மட்டும் கொண்ட அலகாகஇருந்தது.
அப்போது இச்சபைக்குள் சாய்ந்தமருதோ கல்முனைக்குடியோ பாண்டிருப்போ மருதமுனையோ உள்ளடங்கவில்லை. ஆக ஆரம்பத்தில் கல்முனை என்பது முற்றுமுழுதாக 100வீதம் தமிழர்களை மாத்திரமே கொண்டது என்பது உலகறிந்தவிடயம்.
பின்பு 1946இல் 3ஆம் இலக்க பட்டினசபைச் சட்டத்தின்பிரகாரம் ஏலவேயிருந்த கல்முனையுடன் கல்முனைக்குடி என்ற கிராமமும் சேர்க்கப்பட்டு அப்போதையஅரசியல்சக்திகளால் முஸ்லிம்கள்பெரும்பான்மையாக வரக்கூடியவாறு பட்டினசபையாக தோற்றம்பெற்றது.
முதன்முறையாக பட்டினசபையாக உருவெடுத்த கல்முனையில் சாய்ந்தமருதோ பாண்டிருப்போ உள்ளடக்கப்படவில்லை என்பதை கருத்திற்கொள்ளவேண்டும். முழுகல்முனைத்தொகுதியையும் உள்ளடக்கியவாறு கரவாகுப்பற்று என்ற இறைவரி உத்தியோகத்தர் பிரிவு அல்லது பிரிவுக்காரியாதிகாரி பிரிவு என்ற (D.R.O.Division) என்ற பிரிவு உருவானது.
இதற்குள் 4 பிரிவுகள் உள்ளடக்கப்பட்டன. இக் கட்டுரையில் முற்பத்தியில் சுட்டிக்காட்டப்பட்ட கல்முனைபட்டினசபையுடன் பாண்டிருப்பு மருதமுனையை உள்ளடக்கிய கரவாகு வடக்கு சாய்நதமருதைக்கொண்ட கரவாகு தெற்கு சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனையைக்கொண்ட கரவாகு மேற்கு ஆகிய 3 கிராமசபைகள் இருந்தன.
1946இல் தோற்றம்பெற்ற இந்த 4 சபைகளைக்கொண்ட கரவாகுப்பற்று உதவிஅரசாங்க அதிபர் பிரிவு 1987ஆண்டின் 15ஆம்இலக்க பிரதேசசபைச்சட்டத்தின் பிரகாரம் அதுவரைஇருந்த பட்டினசபைமுறை ஒழிக்கப்பட்டு பிரதேசசபை முறை தோற்றுவிக்கப்பட்டது. அதன்படி 1987இல் கல்முனை பிரதேசசபை உருவானது.
பின்னர் அது 11.12.1998அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்பிரகாரம் 11.06.1999முதல் நகரசபையாக தரமுயர்த்தப்பட்டது.பின்னர் அது 2002.04.15ஆம் திகதியன்று மாநகரசபையாக மாற்றம்பெற்றது. இந்த மாகரசபை எல்லைக்குள் முன்பிருந்த கரவாகுப்பற்றுக்குரிய 4சபைகளும் உள்ளன என்பதை குறிப்பிடமுடியும்..
நிருவாக அலகைப்பொறுத்துவைர தற்போது கல்முனை பிரதேச செயலகம் சாய்ந்தமருது பிரதேசசெயலகம் கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் என 3பிரிவுகள் இயங்கிவருகின்றன. கல்முனை வடக்கு உபபிரதேசசெயலகம் என்பது காணி நிதி அதிகாரங்களில்லாமல் கடந்த 30வருடகாலமாக இயங்கிவருவதே இன்றைய போராட்டத்திற்கு அடிப்படைக்காரணம்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திங்களன்று(17) ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) நிறைவுற்றது.
இந்த உண்ணாவிரதம் ஏன் ? என்ற கேள்விக்கு கடந்த 30வருடகாலமாக ஆட்சியில் மாறிமாறிவந்த அரசாங்கங்களும் தமிழ்த்தலைமைகளும் இந்தப்பிரச்சினையை இழுத்தடித்துவந்ததே காரணமாகும் என எளிதாகக்கூறலாம்.
நாட்டின் ஜனாதிபதி பிரதமர் குறித்த அமைச்சர் ஆகியோடு எத்தனை தடவைகள் இதுசம்பந்தமாகப்பேசியிருக்கிறோம். உடனே செய்வோம் என்பார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. அதனால்தான் எவ்வித அழுத்தமுமில்லாமல் நாங்களாகவே இதனை ஆரம்பித்தோம் என்கிறார் உண்ணாவிரதியான மாகநரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்.
கல்முனை உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவாக காரைதீவில் பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப்போராட்டம் புதனன்று விபுலாநந்த சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு சனியன்று நிறைவுற்றது. அதேபோல நாவிதன்வெளியிலும் நடைபெற்றது.வடபகுதியிலும் ஆதரவுப்பேரணிகள் ஆர்ப்பாடங்கள் தினமும் ஒவ்வொரு தமிழ்க்கிராமங்களிலிருந்து மக்கள் பேரணி படையnடுத்து வந்தன.
இவ்வுண்ணாவிரதப்போராட்டம் தமிழர் என்ற அடிப்படையில் வரலாறு காணாத எழுச்சி ஏற்பட்டதை மறக்கமுடியாது. கல்முனைதமிழ்மக்கள் மன்றம் சகலஏற்பாடுகளையும் இரவுபகல்பாராது செய்துகொடுத்திருந்தனர். அத்தனைநாட்களும் அந்த தமிழ்இளைஞர்களின் தியாகம் பாராட்டுதற்குரியது.
கிழக்கு மட்டுமல்ல வடக்கு மலையகம் தெற்கு என்று பல இடங்களிலிருந்தும் பூரண ஆதரவு கிடைத்தது. நாட்டின் முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் இதற்கு குரல்கொடுத்தையும் பலர் நேரில்வந்து ஆதரவுதெரிவித்ததையும் காணமுடிந்தது.அதேவேளை பலர் மௌனியாக இன்றுவரை இருந்துவருவதையும் மட்டக்களப்பில் தமிழ் எம்பிக்களாகவிருந்துகொண்டு வருகைதராதோரும்உள்ளனரென்று மக்கள் கவலையடைகின்றனர்.
இதுவரை அமைச்சர்களான மனோகணேசன் தயாகமகே பாராளுமன்ற உறுப்பினாளான எம்.ஏ.சுமந்திரன் அங்கஜன் இராமநாதன் சிவசக்திஆனந்தன் கவிந்திரன் கோடீஸ்வரன் ச.வியாழேந்திரன் வண.அத்துரெலியரத்ன தேரர் முன்னாள் பிரதியமைச்சர் வினாயகமூர்த்திமுரளிதரன் த.தே.கூட்டமைப்பின் தமிழ்மக்கள் விடுதலைமுன்னணியின் செயலாளர்நாயகம் செ.கஜேந்திரன் தமிழ்மக்கள்விடுதலைப்புலிகளின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மகளிரணித்தலைவி செல்வி த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பி.அரியநேத்திரன் சுரேஸ்பிரேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் வெள்ளிமலை வடமாகாணசபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சட்டத்தரணி வி.தவராஜா முன்னாள் அமைச்சர் அனந்திசசிதரன் திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் வி.இ.கமலராஜன் காரைதீவுபிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சி.புஸ்பலிங்கம்(கொக்கட்டிச்சோலை) சா.மகேந்திரலிங்கம்(ஆரையம்பதி) முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சோ.புஸ்பராஜா மு.இராஜேஸ்வரன் மா.நடராஜா த.அ.கட்சி உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட பல தமிழ்த்தலைவர்கள் அரசியல் வேறுபாடின்றிக்கலந்துகொண்டு ஆதரவை நல்கியிருந்தனர்.
இறுதியாக இலங்கையின் முக்கிய மதப்புள்ளி பொதுபலசேனா தலைவர் வண. ஞானசாரதேரர் தமது குழாத்தினருடன் வந்து சாகும்வரை விரதத்தை முடிவுறுத்தினார். அமைச்சர்கள் 3மாதகாலம் செய்துதருவதாக பிரதமர் கூறியதைக்கூற தேரரோ 30நாட்களுள் செய்துதருகிறேன் என்றதும் வேறுவழியில்லாமல் உண்ணாவிரதிகள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொண்டனர்.
தமக்கு இச்செயலகத்தைப் பெற்றுத்தருவார்கள் என்று 30வருடகாலமாக தமிழ்மக்கள் நம்பியிருந்த த.தே.கூட்டமைப்பின் தலைவரோ செயலாளரோ அந்தப்பக்கமே வராதது மட்டுமல்ல வாய்திறக்காதது இந்த மக்கள் மத்தியில் பாரிய வெறுப்பையேற்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டலாம்.
தமது உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தில்ஈடுபட்டும்கூட இவ்விதம் நடந்துகொண்டது தமிழ்மக்களின் எதி;;ர்கால அரசியலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.ஆனால் இப்பிரச்சினையை தேர்தல் காலத்தில் பேசுபொருளாகவைத்து தெரிவான த.தே.கூட்டமைப்பினர் நடந்துகொண்ட விதம் இன்னும் அதன் தலைவர் சம்பந்தரோ மாவையோ வாய்திறக்காதது கல்முனை வாழ் தமிழ்மக்கள் மத்தியில் பாரிய வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவுகளையே சுமந்திரனிலும் கோடீஸ்வரனிலும் மக்கள் காட்டினர் என்பதை ஊடகங்களில் அறிந்துகொள்ளலாம்.
இதேவேளை ஞானசார தேரரரை அங்கு அழைத்துவந்தது சரியா? என மற்றுமொரு தரப்பினர் கேள்வியெழுப்புகின்றனர்.
த.தே.கூட்டமைப்பினர் உரியமுறையில் செயற்பட்டிருந்தால் தமது மக்களின் பிரச்சினைகளை தேவைகளை தீ;ர்த்துவைத்திருந்தால் ஞானசார தேரர் ஏன் கல்முனை வருகிறார்? அவர் வருவதற்கு வகை செய்தவர்கள் கூட்டமைப்பினரே. நிலைமை இப்படியிருக்க ஆபத்பாண்டவராகவந்து இறுதிநேரத்தில் உயிரைக்காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் கௌரவமாக உண்ணாவிரத்தத்தைமுடித்துவைத்து 30நாட்களுள் தான் அதனைப்பெற்றுத்தருகிறேன் என்று உறுதிமொழி சொன்ன ஞானசாரதேரரை எவ்வாறு பிழையென்று சொல்வது? என்று மற்றத்தரப்பினர் சொல்கின்றனர்.
அவர் சிறுபான்மை தரப்பில்மூக்கை நுழைக்கின்றார் என்றால் அதற்கு களம் அமைத்த வழிவிட்டவர்கள் யார்? என்பதனையும் இந்தக்கட்டத்தில் சற்றுசிந்தித்துப்பார்க்கவேண்டும் என்பது தமிழ்புத்திஜீவிகளின்கருத்தாகும்.
உண்ணாவிரதகாலகட்டத்தில் எந்தவொரு செய்தியையோ உறுதிமொழியையோ காலஅவகாசத்தையோ தமிழ்த்தலைமைகள் வழங்கவில்லை.ஏலவே தேர்தல் காலத்தில் கல்முனையில் உறுதியளித்த சம்பந்தரோ ஏனைய தலைமைகளோ உறுதியளிக்காததை எவ்வாறு நோக்குவது என்பது அவர்களின் விரக்திமிகுந்த வேதனையாகும்.
எதுஎப்படியிருப்பினும் 30வருடகால கோரிக்கை இன்று உச்சக்கட்ட உண்ணாவிரதத்தால் சகலரையும் விழிப்படையவைத்துள்ளதுடன் தீர்வு கட்டாயம் வழங்கப்படவேண்டும் என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. அதற்கான ஒரு திருப்பு முனையாககூட கருதலாம்.
எனவே இது முடிவல்ல ஆரம்பம். எனவே சம்பந்தப்பட்ட மத அரசியல் தலைவர்கள் தீர்வுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு குறித்த காலக்கெடுவுக்குள் தீர்வைப்பெற்றுத்தரவேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்நிலையில் தாமதிக்காமல் விரைந்து அர்த்தபுஸ்டியான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதே இனவிரிசலைத் தவிர்ப்பதற்கான உபாயமாகும் எனலாம்.