Ads Area

காரைதீவு பிரதேச செயலாளராக சிவஞானம் ஜெகராஜன் நியமனம்.

(காரைதீவு  நிருபர் சகா)

திருக்கோவில் பிரதேச செயலாளராகவிருந்த சிவஞானம் ஜெகராஜன் மீண்டும் காரைதீவு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமகாலத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளராகவிருந்த ஜெகராஜன் காரைதீவுப் பிரதேச பதில் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்தார்.

காரைதீவு பிரதேசசெயலாளராகவிருந்த வேத. ஜெகதீசன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசஅதிபராக பதவியுர்வுபெற்றுச்சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பதில் கடமைபுரிந்த ஜெகராஜன் தற்போது பூரணமாக காரைதீவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏலவே காரைதீவின் முதலாவது பிரதேசசெயலாளர் எஸ்.இராமகிருஸ்ணனுக்கு அடுத்ததாக ஜெகராஜன் பிரதேசசெயலாளராகவிருந்தார்.பின்னர் அவர் திருக்கோவிலுக்கு இடமாற்றம்பெற்றுச்சென்றிருந்தார்.

நேற்று (1) திங்கட்கிழமை  திருக்கோவிலில் அவருக்கு பிரியாவிடை நிகழ்வு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ஆளுயரமாலைசூட்டி பொன்னாடைபோhத்துக்கௌரவிக்கப்பட்டார். உதவிபிரதேசசெயலாளர் கந்தவனம் சதீஸ் தலைமையில் இந்நிகழ்வ நடைபெற்றது.

திருக்கோவில்பிரதேச செயலாளராக ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.கஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe