ரயில்களில் யாசகம் பெற்று வந்த 65 வயதுடைய கண் பார்வையற்ற வயோதிபப் பெண் ஒருவருக்குச் சொந்தமாக 3 வீடுகள் இருப்பதும், அவரது வங்கிக் கணக்கில் 5 லட்சம் ரூபாய் பணமும் வைத்திருந்தமையையடுத்து குறித்த பெண்மணி ரயில்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவற்றில் 2 வீடுகளை அவரது மகள்களுக்கு வரதட்சணையாக வழங்கியுள்ளதாகவும் மூன்றாவது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விதவைப் பெண்ணான அவர் கம்பஹா மற்றும் கோட்டை ரயில் நிலையங்களுக்கிடையில் யாசம் பெற்று வருவதாகவும் நாள் ஒன்றுக்கு சுமார் 4000 ரூபா கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.
தான் யாசகம் பெறுவது தனது மகள்களுக்கும் தெரியும் என்றும், மருமகன்கள் நல்ல வேலைகளில் இருப்பதாகவும் அந்த வயோதிப பெண் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று அவரை கைது செய்த நிலையில் அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.