சாய்ந்தமருது பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் : உணவு ஒவ்வாமையினால் பாதிப்பு !!
கல்முனை கல்விவலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் உணவு ஒவ்வாமை காரணமாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல வருடங்களாக பாடசாலையில் உணவகம் நடத்தி வரும் உசைன் என்பவரின் உணவகத்தில் உணவருந்திய மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். உணவகத்தை தற்காலியமாக மூடிவிட்டு மாணவர்கள் சாப்பிட்ட உணவின் பகுதிகளையும், மாதிரிகளையும் பரிசோதனைக்காக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
பெற்றோர்களும், பிரதேசவாசிகளும் பதட்டத்துடன் வைத்தியசாலை முன்றலிலும், பாடசாலையிலும் குழுமி நிற்கின்றனர்.
நூருல் ஹுதா உமர்