நான்கு வருடங்களுக்கு முதல் இலங்கையில் பியுமினி ஒரு ஸீரோ. ஆனால் இப்போது இவரொரு வளர்ந்து வரும் தொழில் அதிபர். மாத்தளையில் இருந்து உக்குவளைக்கு சென்று, அங்கிருந்து காட்டுக்குள் நாலு கிலோமீட்டர் தூரம் மேடு பள்ளம் ஏறி இறங்கினால், பியுமினி யையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும், தொழில் சாலையையும், அங்கு வேலை செய்யும் ஊழியர்களையும் நீங்கள் சந்திக்கலாம்.
உயர்தர கல்வி படிக்கும் போதே, எல்லோருக்கும் வரும் காதல் நோய் பியுமினிக்கும் வந்தது. அது ஜுரமாக மாறி படிப்பை பாதியில் விட்டு கணவருடன் ஓட முடியாமல் நிற்கும் போதுதான் வாழ்வதற்கு அன்பு மட்டுமல்ல பணமும் தேவை என்பதை பியுமினி உணர்ந்துகொண்டார். ஆனால் பியுமினி புத்திசாலி, தொடர்ந்து சாப்பிட ஏதாவது வழி உண்டா என யோசித்த வேளை கணவருக்கு சமைக்கத்தெரியும் என்பது நினைவுக்கு வந்துள்ளது.
பிறகென்ன,மாத்தளை டவுனில் ஒரு குட்டி ஆப்ப கடை திறக்க வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இவர்களது முன்னேற்றத்தை பொறுக்க முடியாத கடை உரிமையாளர் , இரவோடிரவாக அவர்களை விரட்டி, மீண்டும் நடு வீதிக்கு தள்ளியுள்ளார். இந்நிலையில் கையில் இருந்த பதினைந்தாயிரம் ரூபாவில்,மீண்டும் வீதி ஓரத்தில் ஒரு தேங்காய் ரொட்டி ( பொல் ரொட்டி ) கடை திறந்தபோதும் அவர்களிற்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கவில்லை. இருவருக்கும் மூன்று நேரம் சாப்பிட முடியவில்லை.
எல்லோரிடமும் அழுது புலம்பி விடுவாள். யெஸ் அவளது புலம்பல் யாரோ இங்கிலாந்தில் வசிக்கும் ஸ்ரீலங்கனின் காதில் விழுந்துள்ளது. ஆம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் அடுத்த வீட்டில் என்ற தத்துவம் பியுமினிக்கு புரிய வைக்கப்பட்டது. அடுத்த நாளே ஒரு ஓலைக்குடிசைக்குள் உட்கார்ந்து கிட்டதட்ட ஆயிரம் முறுக்கு செய்து, பொலித்தீனில் அடைத்து கொழும்பில் உள்ள பிரபல முறுக்கு மொத்தவியாபாரியின் கடைக்கு பியுமினி கணவருடன் சென்றாள். அங்கிருந்த முறுக்கு முதலாளி உடனடியாக இவர்களது பொருளை நிராகரித்த போதும், மனம் தளராமல் மீண்டும் அடுத்தநாளும் அங்கு சென்றார்,அழுத்தம் திருத்தமாக நிராகரித்தார் முதலாளி.
ஆனால் ஐம்பது முறுக்கு போத்தலுக்காவது ஒப்புதல் எடுக்காமல் மாத்தளைக்கே வரக்கூடாது என பியுமினிக்கு அந்த ஆலோசகரால் கட்டளை இடப்பட்டிருந்தது.பியுமினியின் கணவர் மாத்தள தம்புள்ள பிரதான வீதியில் ஒலைகொட்டகையில் பொல் ரொட்டி விற்றுக்கொண்டிருந்தார், பியுமினி பெட்டா பஸ் நிலையத்தில் ஒன்றரை மாதம் அலைந்தார்.அடிமேல் அடி அடித்தால் முறுக்கு விற்கின்ற முண்டாசுக்கரனுகளும் குப்புற விழுவார்கள் என்பதற்கு பியுமினி ஒரு எடுத்துக்காட்டு. அப்போது ஆறு போத்தல் பாம் ஒயில் கடனுக்கு கேட்டபோது, போடி போ என்று சொன்ன குருநாகல எண்ணெய்கிடங்குகாரர், கம்பளை அரிசி ஆலை உரிமையாளர், கொழும்பு முறுக்கு முதலாளி அனைவரும் இப்போது பியுமினியின் வரவுக்காக காத்துகொண்டிருக்கின்றார்கள்.
சவால்களை சந்திக்க தயாராக இருப்பவர்களிற்கு எப்பொழுது வெறிப்படிகள் காத்துகொண்டே இருக்கும் என்பதற்கு பியுமினி ஒரு எடுத்துக்காட்டு.