திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் தங்கத்துரை தனுஸ்டன் என்பவருடைய கழுத்தை வெட்டி கொலை செய்த சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவை பிறப்பித்தார்.
அவருக்கு பிணை கோரி திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டத்தரணி தனுஷ்க மெதகெதர ஊடாக பிணை விண்ணப்பம் செய்யப்பட்டு இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்டு குறித்த வழக்கில் அனைத்து விடயங்களையும் பரிசீலனை செய்தபோது இது ஒரு திட்டமிட்ட பயங்கரமாக மேற்கொள்ளப்பட்ட கொலை என நீதிபதி கூறினார்.
இலங்கை மாத்திரமில்லாமல் உலக மக்களையே அதிர்ச்சிக்கும் மக்களின் மனதை இறுலடிக்கக்கூடியவாறு மேற்கொள்ளப்பட்ட ஒரு மனிதாபிமான மற்ற கொலை எனவும் நீதிபதி குறித்த சந்தேக நபரின் தாயிடம் கூறி எச்சரிக்கை செய்தி குறித்த பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார்.
மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த இந்த கொலை சம்பவம் பற்றி ஒரு சரியான அணுகு முறையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு படித்ததோடு இது ஒரு பகிரங்கமான கொலை எனவும் இக்கொலை குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி பகிரங்கமாக எச்சரித்தார்.
இறந்தவரை கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்தத்துடன் ஓடிசென்று கடற்படை முகாமுக்கு முன்னால் அமைந்திருக்கும் முச்சக்சக்கர வண்டி சாரதியிடம் தன்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூரியும் முச்சக்கரவண்டி சாரதி அதனையும் பொருட்படுத்தாது ஓடிவிட்டார். இது அந்த இடத்தில் காணப்பட்ட சி.சி.டி.வி கெமராவில் பதிவாகி உலகம் பூராகவும் பரப்பப்பட்டது பொதுமக்களுடைய அபிப்பிராயம் குறித்த காயம்பட்டவரை முச்சக்கரவண்டி சாரதி அந்த நேரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தால் அவரின் உயிரை பாதுகாத்து இருக்கலாம் என்பதாகும்.
எனவே தான் மேல் நீதிமன்ற நீதிபதி இது ஒரு மனித நேயமற்ற செயல் என முச்சக்கர வண்டியின் சாரதி பற்றியும் அதன் கடுமையாக விமர்சித்தார் இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் நடை பெறவில்லை எனவும் கூறி குறித்து பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார்.