கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது கருவிழி ஸ்கேன் செய்யப்படும் - குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது கருவிழி ஸ்கேன் அடையாளம் காண்பதற்கான முறைமை அறிமுகம் செய்யப்படவுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரியல் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான கருவிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
போலியான தகவல்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டை கொண்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசித்தல் மற்றும் நாட்டில் இருந்து வெளியேறுவதை அடையாளம் காண்பதற்கு புதிய நடைமுறை உதவியாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.