(நன்றி - நா.தினுஷா)
இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரா சமூகத்தின் அஹூரா முபாரக் மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக இதுவரையில் 21 ஆயிரம் போரா சமூகத்தார் வருகை தந்துள்ளார்கள்.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த கமகே மேற்கண்டவாறு கூறினார்.
ஏனைய நாடுகளுடன் சிறந்த நட்புறவை பேணினால் மாத்திரமே எமது பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அதன் விளைவுகளை நாங்களே சந்திக்க வேண்டி ஏற்படும். குண்டுத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து போரா மாநாட்டை இலங்கையில் நடத்த தீர்மானித்துள்ளமை எமது நாட்டுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாகும். இதனூடாக இலங்கைக்கு முக்கிய செய்தியை அறிவிக்க கூடியதாக உள்ளது. இங்கு முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் எதுவும் இல்லை என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த மகாநாடு எமக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.