கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. ஆசியாவில் மிகவும் உயர்ந்த கட்டடமாக இடம்பிடிக்கவுள்ள இந்தக் கோபுரம், 356 மீற்றர் உயரம் கொண்டது. 4 நிலக்கீழ் மாடிகளையும் கொண்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மாணப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட்டு அங்குரார்ப்பணம் செய்ய காத்திருக்கிறது.
90 மாடிகளை கொண்ட இந்த கோபுரத்தின் உச்சிக்கு வெறும் இரண்டு நிமிடங்களில் லிப்ட் மூலம் செல்ல முடியும் .
1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக அமைந்திருக்கும் கோபுரத்தை அமைக்க 104 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது