ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.
வாக்களிக்கும் போது ஆள் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டியது அத்தியாவசியமானது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணம் கட்டாயமானது என தெரிவித்துள்ளார்.
ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியாதவர்களுக்கு விசேட அடையாள அட்டை ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

