சம்மாந்துறையில் முகைதீன் மாவத்தை வீதியில் சிலர் மாட்டுக் கழிவுகளைப் போட்டுச் செல்வதாகவும் அதனால் அப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் மேலும் குறித்த வீதியானது மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுவதோடு வீதியின் இருபக்கமும் காடுகள் போன்று பற்றைகள் வளர்ந்து காணப்படுவதாகவும் அதனால் இரவு நேரப் பயணங்கள் மேற்கொள்வதற்கு பொது மக்கள் மிகவும் சிரமமப்படுவதாகவும் அப் பிரதேச மக்கள் குறை கூறுகின்றனர்.
வீதியின் துப்புரவுப் பணி, திருத்த வேலைகள் போன்றவற்றில் சம்மாந்துறைப் பிரதேச சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்துவதோடு, மாட்டுக் கழிவுகளை கொட்டுவோர் விடையத்திலும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பிரதேச மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
தகவல் மற்றும் படங்கள் - Sulaimalebbe Jahakan