இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களுக்கு நியாயமான ஆட்சியைக் கொடுக்க வேண்டியது அவரது கடமை என நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.