டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் மூன்றாவது நாளாக வன்முறை நீடித்து வருகிறது. நிலைமையை கட்டுப்படுத்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற வன்முறையில் தலைமைக் காவலர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
News18 Tamil Nadu