Ads Area

எம்முடன் கூட்டணி பேச்சுவார்த்தை என நேற்று ரவுப் ஹக்கீம் தெரிவித்ததில் உண்மை இல்லை - JVP கட்சி.

சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எவ்வித பேச்சும் நடத்தப்படவில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்துள்ள ரவூப் ஹக்கீம் யாரையாவது பிடித்து தொங்கப் பார்க்கிறார். அவர் யாரின் பின்னாலாவது செல்லட்டும். இவ்வாறான கதைகளை இட்டுக்கட்டாமல் அவர் தனது அரசியலை செய்யட்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ஊடாகவே ஜே.வி.பி. போட்டியிடும் என்றும் அக்கட்சியால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உட்பட எமது கொள்கையுடன் இணங்கக்கூடிய சிவில் அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு, பரந்தப்பட்ட கூட்டணியை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் –

இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எனவே, வெகுவிரைவில் பலமான சக்தியாக வருவோம்.” என்றும் கண்டியில் நேற்று (23) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் ஜே.வி.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,

” மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரீசிலித்துவருகின்றது. இதற்கான பேச்சும் நடத்தப்பட்டுவருகின்றது என்று ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. அது ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட கருத்தாகும். கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸன் ஆகியவற்றுடன் எவ்வித பேச்சுகளையும் ஜே.வி.பி. நடத்தவில்லை.

அக்கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நோக்கமும் தமது கட்சிக்கு இல்லை. தேசிய மக்கள் சக்தியின்கீழ்தான் பொதுத்தேர்தலில் ஜே.வி.பி. போட்டியிடும்.” என்றுள்ளது.

நன்றி - சிவ ராமசாமி


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe