சாய்ந்தமருதூரை பிறப்பிடமாகக் கொண்டு கல்முனை பொலீஸ் நிலையத்தில் நீண்ட காலமாக பதில் தலைமை அலுவலக பொறுப்பதிகாாியாக கடமையாற்றுகின்ற பொலீஸ் பாிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் (அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்கள் சேவை மூப்பு அடிப்படையில் பொலீஸ் ஆணைக் குழுவினால் பிரதான பொலீஸ் பாிசோதகராக (chief inspector of police) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதி உத்தம ஜனாதிபதி அவர்களினால் தேசத்தின் புத்திரன் என்ற பதக்கத்தினையும் 2015.10.08ல் பெற்றுள்ளார். அத்தோடு கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மரண விசாரணை டிப்ளோமா (Distance Learning Diploma in Death Investigation 2015) பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
மேலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் – மட்டக்களப்பு சிங்கள மொழிப் பயிற்சி டிப்ளோமா கற்கை நெறியையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்து சான்றிதழ் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.