Ads Area

தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவின் சர்ச்சையான அறிக்கை ; நடந்ததை விளக்குகிறார் பா.உ மன்சூர்.

சம்மாந்துறை அன்சார்.

நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்­பாக மேற்­பார்வை செய்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கும் பரிந்­து­ரை­களை முன்­வைப்­ப­தற்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மலிக் ஜய­தி­லக தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அக்­குழு தனது அறிக்­கையை கடந்த 19 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­துக்குச் சமர்ப்­பித்­தி­ருந்­தது.

தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வைக் குழுவின் அறிக்­கையும் பரிந்­து­ரை­களும் முஸ்லிம் சமூ­கத்தின் மீதான கடு­மை­யான விதி­களைக் கொண்­ட­தாக அமைந்­துள்­ளன. முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிகாப் போன்ற ஆடைகள் தடை­செய்­யப்­பட வேண்­டு­மென பரிந்­துரை செய்­துள்­ள­துடன் இதுபோன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய சிபாரிசுகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மலிக் ஜய­தி­லக தலை­மையில் நியமிக்கப்பட்ட இக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஆகிய இரு முஸ்லிம் எம்.பி.க்கள் அங்கம் வகிக்கின்ற போதிலும் அவர்களது சம்மதத்துடன்தான் இந்த சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டனவா எனும் சந்தேகமும் தற்போது சமூக வலையத்தளங்களில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இது தொடர்பாக சம்மாந்துறை24 இணையத்தளத்திற்கு விளக்கமளித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்,

நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்­பாக மேற்­பார்வை செய்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கும் பரிந்­து­ரை­களை முன்­வைப்­ப­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மலிக் ஜய­தி­லக தலை­மையில் நியமிக்கப்பட்ட குழுவில் நானும் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் அவர்களும் இடம் பெற்றிருந்தோம் இக் குழுவினர் நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்­பாக பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்ந்து பல முடிவுகளை எடுத்திருந்தனர் இக் குழுவில் நாங்களும் உறுப்பினர்களாக இருந்தும் எடுக்கப்படும் முடிவுகளில் எங்களிடம் எந்தவித ஆலோசனைகள் கேட்கப்படவுமில்லை எமது கருத்துக்களுக்கும் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படவுமில்லை.

இதிலுள்ள பல பரிந்­து­ரைகள் முஸ்லிம் சமூ­கத்தை ஓர் இறுக்­க­மான கட்­ட­மைப்­புக்குள் உட்­ப­டுத்தும் வகையிலேயே முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன இது குறித்த நாங்கள் பல முறை தங்களது எதிர்ப்பை தெரிவித்து குறித்த அறிக்கையின் இறுதி வடிவத்தில் எவ்வித ஒப்பமும் இடுவதில்லை என்றும் முடிவெடுத்திருந்தோம் இருந்தும் எங்கள் இருவரிடமும் இறுதி அறிக்கை காண்பிக்கப்படாது, ஒப்பமும் பெற்றுக் கொள்ளப்படாது வெளியிடப்பட்டிருக்கின்றது. 

முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகிய நான்  இதனை ஆட்சேபிக்கின்றேன் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இவ்வாறான சட்டங்களுக்கு நாங்கள் ஒரு போதும் தலைசாய்க்கவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன், கண் முன்னே முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைப்பது தொடர்பான அறிக்கை வெளியிடப்படுவதை ஒரு உண்மையான முஸ்லிம் ஏற்றுக் கொண்டு ஒப்பமிடுவானா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்­பாக மேற்­பார்வை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் குழுவினரால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது இறுதி முடிவானது அல்ல அது வெறும் பரிந்துரைகளே. முஸ்லிம் சமூகம் சார்ந்த கருத்துக்களை, பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வதற்காகவே அக் குழுவில் நாங்கள் இருவரும் நியமிக்கப்பட்டோம் அப்படியிருந்தும் எங்களிடம் முஸ்லிம் சமூகம் தொடர்பான விடையங்களில் கருத்துக்கள் கேட்டறியப்படாது, எங்களின் ஒப்பமேதும் பெறப்படாது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதானது வேறு ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

ஆகவே எங்களது கருத்துக்கள் உள்வாங்கப்படாது, எங்களது ஒப்பமேதும் பெறப்படாது சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கை தொடர்பில் எங்களது ஆட்சேபனையினை நாங்கள் சபாநாயகரிடம் எழுத்து மூலம் சமர்ப்பிக்க இருக்கின்றோம்.

குறித்த குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை விடையத்தில் என் மீது திட்டமிட்டு விமர்சனங்கள் செய்யப்படுகின்றது என் மீது காழ்ப்புணர்வு கொண்ட பலர் இதனைப் பூதாகரமாக்கி அரசியல் இலாபம் காண்கின்றனர்.

எனக் குறிப்பிட்டார்.

குறித்த அறிக்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிகாப் போன்ற ஆடைகள் தடை­செய்­யப்­பட வேண்­டு­ம் எனவும், பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெறும் அனைத்து பிர­சா­ரங்­க­ளையும் ஒலிப்­ப­திவு செய்­ய­வேண்டும். முஸ்­லிம்­களின் இன விகி­தா­சா­ரத்­திற்கு அமைய பள்­ளி­வா­சல்­களின் எண்­ணிக்கை தீர்­மா­னிக்­கப்­ப­ட­வேண்டும் எனவும், 16 வயது பூர்த்­தி­யா­ன­வர்­களே மத்­ரஸா கல்­வியில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும். இன, மத, மற்றும் சமு­தாய அடை­யா­ளங்­களை வெளிப்­ப­டுத்­து­கிற பெயர்­க­ளுடன் கூடிய பாட­சா­லை­களின் பெயர்கள் மாற்­றப்­ப­ட­வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் பதவியேற்றபோது ஆற்றிய கன்னி உரையில் அனைவருக்கும் மத சுதந்திரம், கலாசார சுதந்திரம் வழங்கப்படுமென உறுதியளித்திருந்தார். இவ்வாறான நிலையில் அரசினால் நிறுவப்படும் குழுக்கள் கூட இனவாத செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றமையை அனுமதிக்க முடியாது. இவ்விகாரங்களில் ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு உரிய தீர்வுகளை முன்வைக்கவேண்டும்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe