Ads Area

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ஜனாதிபதி வசம்.

குடிவரவு, குடியகல்வு திணைக்களம், விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஜனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி மூலம் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கீழ் இருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் செயற்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நேற்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அந்த திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கமைய குடிவரவு குடியகல்வு நடவடிக்கை மற்றும் இலங்கை குடிமகன்களுக்கான நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe