Ads Area

பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைந்துள்ள நிலையில் எந்த வேளையிலும் பாராளுமன்றத்தை கலைக்கும் இயலுமை ஜனாதிபதிக்கு உள்ளது.

19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்களை கடந்த பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.  

அதனடிப்படையில் பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைந்துள்ள நிலையில் எந்த வேளையிலும் பாராளுமன்றத்தை கலைக்கும் இயலுமை ஜனாதிபதிக்கு உள்ளது அவ்வாறு பாராளுமன்றம்  கலைக்கப்படுமானால் 68 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும்.  5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது. 

அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் 36 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது.  அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் இந்த வாய்ப்பு இல்லாமல் போகவுள்ளது. 

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்றைய தினம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe