மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ச அம்பாறையில் போட்டி.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான கடற்படை லெப். கொமாண்டர் யோஷித ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியலில் போட்டியிட உள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யோஷித ராஜபக்சவின் மனைவி நீதிஷா, மீடியா பெக்டரி என்ற விளம்பர விநியோக நிறுவனத்தின் மீடியா செடுலிங் நிறுவனத்தை கொள்வனவு செய்திருந்தார். அரசியல் பிரசார நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்யவே இந்த நிறுவனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ச விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.
செய்தி.கொம்.