பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினியடி பகுதியில் செவ்வாய்க்கிழமை(28) மாலை சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதை கண்ட விசேட அதிரடிப்படையினர் 30 வயதான ஒருவரை 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் மே 5 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.