Ads Area

கொரோனா காரணமாக வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட கர்பிணிப்பெண் கற்பழித்து கொலை..!

இந்தியாவில் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது நிரம்பிய கர்ப்பிணி ஒருவரே கொரோனா காரணமாக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொது கற்பழித்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்ததால் உடனே அவரை மருத்துவமனையில் உள்ள தனி பகுதியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து கடந்த 3ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

வீடு திரும்பிய 3-வது நாளில் அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகமாகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது மருத்துவமனையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது மருத்துவமனை ஊழியர் இருவர் கர்ப்பிணியை தொடர்ந்து 2 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனாலேயே ரத்தப்போக்கு அதிகமாகி இறந்துவிட்டதாகவும் பெண்ணின் மாமியார் புகார் கூறினார்.

குறித்த பெண்ணின் மாமியார் இது பற்றித் தெரிவிக்கையில் தனது மருமகள் அவருடைய இறுதி தருணத்தில் வைத்தியர்களால் தான் தனிமைப்படுத்தப்பட்ட நேரம் கற்பழிக்கப்பட்டதாக தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி கண்காணிப்பு கமறாக்களின் உதவியுடன் மருத்துவமனை ஊழியர்களை கைது செய்தனர். கெமறாவில் இருவர் வைத்தியர்கள் அணியும் ஆடையினை அணிந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்ததனை வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த  இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக பீகார் மாநில மகளிர் ஆணைய அதிகாரிகளும் விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள்.

செய்தி மூலம் - https://www.indiaglitz.com


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe