Ads Area

சம்மாந்துறையில் நோயாளர்களுக்கான மருந்துகளை அவர்களது வீடுகளுக்குச் சென்று வழங்கும் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபா.

இரு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை கிளினிக் வருகின்ற நோயர்களின் வீடு சென்று வழங்குகின்ற பணி தற்போது சம்மாந்துறை வைத்தியசாலையில் இடம்பெறுகின்றது.

சம்மாந்துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபா தலைமையில் இந் நடைமுறை சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன பீதியினாலான அசாதாரண சூழ்நிலையில் வைத்தியசாலைக்கு வருகின்ற 'கிளினிக் நோயளர்களுக்கான' இரு மாதங்களுக்கான தேவையான மருந்துகளே இவ்வாறு விநியோகிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த மருந்துப் பொதிகளை வைத்தியாசாலையின் ஊழியர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும். சிலரது மருந்துப் பாெதிகள் தபாலகத்தின் ஊடகவும் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NewsPlus Tamil











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe