கத்தாரில் தொழிலுக்கு சென்றுள்ள இலங்கையர்கள், தங்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கத்தாரில் இதுவரை கிட்டத்தட்ட 11,000க்கும் அதிகமான கொரோனா நோயாளார்கள் பதிவாகியுள்ளனர். ஒரு பெரிய போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரியும் இந்த குழு, சுமார் 800 இலங்கையர்கள் அங்கு பணிபுரிவதாக கூறுகிறது.
வைரஸ் தொற்று பரவல் இருக்கின்றபோதும், அங்குள்ள பணியாளர்கள் பணியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
(நன்றி - வேலைத்தளம்)