Ads Area

பிரதேச சபையினால் சம்மாந்துறை ஆண்டியர் சந்தி பஸ்தரிப்பிடம் புனர் நிர்மாணம்..

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் ஆலோசனைக்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நாளாந்தம் மக்கள் பயன்படுத்தும் நிறுவனங்களை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் பிரதேச சபையின் ஊழியர்களினால் புனர்நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைவாக வீரமுனை பஸ் தரிப்பிடம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டமையினை கவனத்தில் கொண்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. இவ்வேலைகள் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கேமுஹம்மட் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.அப்துல் றஸாக் அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe