உலக அளவில் கொரோனா பரவல் விவகாரத்தை பெண்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் சிறப்பாக கையாளப்படுகிறது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அந்நாட்டுத் தலைவர்களுக்கு பாராட்டிவருகின்றனர்.
சீனாவில் ஊஹான் நகரத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் சிதைத்துவருகிறது. தற்போது, ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸின் மையமாக இருந்துவருகிறது. அதேபோல, அமெரிக்காவும் கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து பிரதமர் ஜாசின்டா அர்டெர்ன், கொரோனா வைரஸ் விவகாரத்தை சிறப்பாக கையாள்கிறார் என்பதை விவரிக்க வாஷிங்டன் போஸ்ட் தலைப்பை வைத்து புரிந்துகொள்ளலாம். அதில், ‘நியூசிலாந்து கொரோனா வளைவை தட்டையாக்கவில்லை. மாறாக அடித்து நொறுக்கியுள்ளார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.