பாறுக் ஷிஹான்
தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ளவர்களிடையே உருவாகும் கருத்து ரீதியான வேறுபாடுகளால் இந்த ஆணைக்குழுவின் தேவைப்பாடுகள் தொடர்பில் சந்தேகம் எழுகிறது என அம்பாறை மாவட்ட தேசிய காங்கிரஸின் சட்டவிவகார செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம் றிபாஸ் தெரிவித்தார்.
தேர்தல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
நாட்டின் ஜனநாயக கடமை இ மக்களின் வாக்குரிமை என்பதும் நிலை நிறுத்தப்பட வேண்டிய ஒன்றுதான் கொரோனா வைரஸின் தாக்கம் உலகலாவிய ரீதியில் பரவிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் தென் கொரியா நாட்டிலும் தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கிறது.
அதே நேரத்தில் எமது நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொறிமுறைகளை அரசு கையாண்டு ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல்களை பிற்போட்டிருக்கிறது இந்த அரசாங்கம் கொரோனா வைரஸுக்கான மருந்துகளை கண்டு பிடிக்கும் வரை தேர்தலை ஒத்திவைக்கவும் முடியாது . பாராளுமன்றம் கலைக்கப்பட்டு இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக அங்கீகாரத்தை பெறுவதற்கான தேவை அரசுக்கு இருக்கின்றது. அரசு எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடியான சூழ்நிலையில் ஜனநாயக உரிமைகளை காப்பதற்காக 19 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அம்மூன்று உறுப்பினர்களுக்கும் இடையிலான முரண்பட்ட கருத்துக்கள் எழுகின்ற நேரத்தில் அந்த ஆணைக்குழுவின் அவசியத்தின் தேவை கேள்விக்கும் படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது எவ்வாறெனில் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழு தேவையா என்ற எண்ணப்பாடுகளும் தோற்றம் பெறுகிறது.