தற்போது கத்தாரில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்படுவது வெளிநாட்டு பணியாளர்கள் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பாக தேசிய தொற்றுநோய் தயாரிப்புக் குழுவின் இணைத் தலைவர் தலைவர் Dr Abdullatif al Khal அவர்கள் கத்தார் தொலைக்காட்சிக்கு இன்றிரவு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
ரமழான் மாத்தில் குறிப்பாக இப்தார் ஒன்று கூடல், காரணமாக சமூக இடைவெளி என்பது பொதுமக்களால் கடை பிடிக்கப்படுவதில்லை. தற்போது கத்தாரில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்படுவது வெளிநாட்டு பணியாளர்கள் தான். மேலும் கத்தார் பிரஜைகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் COVID-19 தொற்றானது இரண்டு வாரங்களுக்கு இருந்ததை விட 50 வீதம் அதிகரித்துள்ளது.
கத்தாரில் தற்போது கொரோனா வைரஸ் பரவுதல் உச்ச நிலையை அடைந்திருந்தாலும், நாளாந்த வழக்குகள் உச்சத்தை அடையவில்லை. தினசரி வழக்குகள் குறையத் தொடங்குவதற்கு முன்பே அவை தொடர்ந்து உயரும் என்பதாக தெரிவித்துள்ளார்.
QatarTamil.