சம்மாந்துறை ஜம்மியா குர்ஆன் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 53 குர்ஆன் மத்ரஸா உஸ்த்தாத் (அதிபர்)களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு மனிதநேய நற்பணிப் பேரவை சம்மாந்துறை சிறிலங்கா அமைப்பின் கலாசார மற்றும் சமய விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் பேரவையின் ஸ்த்தாபகத் தலைவரும் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான மனித நேயன் இர்ஷாத் ஏ. காதரின் வேண்டுகோளின் பேரில் நற்பணிப் பேரவையின் ஆலோசகரும் பரமவ்ண்ட் இம்பெக்ஸ் ப்ரைவெட் லிமிடெற் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான எஸ்.எம்.சாலிஹீன், கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர்களான எம்.எச்.எம்.றசாக், ஏ.ஜே.பஷீர் அஹமட் ஆகியோரினதும் இர்ஷாத் ஏ காதர் நற்பணி மண்றத்தினதும் நிதிப்பங்களிப்புடன் நிதி உதவிகள் நேற்று (22) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த நற்பணிப் பேரவையின் ஆளுணர் சபை உறுப்பினரும், பதில் பிரதான ஆலேசகரும்,தென் கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவருமான பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்,பேரவையின் கலாசார,சமய விவகாரப் பிரிவின் ஆலோசகரும் சம்மாந்துறை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவருமான மௌலவி எம்.வை.அஹம்மட் ஜலீல், பேரவையின் தவிஸாளர் டாக்டர் எம்.சி.எம்.காலித்,பொதுச் செயலாளரும் வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.முஸ்டாக் அலி, பிரதித் தலைவர்களில் ஒருவரும் சமூக வலுவூட்டல், கலாசார மற்றும் சமய விவகாரப் பிரிவின் பணிப்பாளருமான அஸ்ஸெய்க் ஏ.எல்.எம்.றிப்கான் ஹாபிழ், பொருளாதார அபிவிருத்திக் குழுச் செயலாளரும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினருமான எம்.எச்.எம்.ஹாரிஸ், மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் ஊடகப் பிரிவின் பணிப்பாளரும் இணைய ஆசிரியருமான கியாஸ் ஏ. புஹாரி மற்றும் தகவல் ஊடகப் பிரிவின் இணைப்பாளர் எம்.சி.அன்சார் ஆகியோர் நிதிகளை வழங்கி வைத்தார்கள்.
பேரவையின் தலைவர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதரின் நீண்டகால திட்டங்களில் இதுவும் ஒன்று.
அதாவது புனித ரமழானில் உலமாக்களை கண்ணியப்படுப்படுத்தும் மனம்நிறை செயற்பாட்டின் ஒரு கட்டமாகவே இந் நிகழ்வு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.