தகவல் - சம்மாந்துறை அன்சார்
ஆதாரம் - சவுதி சுகாதார அமைச்சு.
வளைகுடா நாடுகளில் கத்தார், குவைத், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஓமான், பஹ்ரைன் போன்ற நாடுகளை விடவும் சவுதி அரேபியாவில்தான் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அங்கு 70 ஆயிரத்தையும் தாண்டிச் செல்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 21 வீதமானவர்கள் பெண்கள் எற்றும் 79 வீதமானவர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும் அதே போல் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 15 கொரோனா மரணங்களில் 3 சவுதி அரேபிய நாட்டவர்களும் 12 வெளிநாட்டவர்களும் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.