பாறுக் ஷிஹான்
3 குழந்தைகளை ஒரே சூலில் பொத்துவில் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை(28) அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.
18.5.2020 அன்று குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய பொத்துவில் நகரப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த வியாழக்கிழமை(28) காலை மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 3 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன.
இதில் இரு ஆண் குழந்தைகளும் தலா1910கிராம் 1960கிராம் மற்றும் பெண் குழந்தை 1480 கிராம் நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.இதே போன்று கடந்த மாதமும் இதே மாதமும் நிந்தவூர் மற்றும் கோமாரி பகுதியை சேர்ந்த இரு பெண்களுக்கு தலா ஒரே சூலில் 3 குழந்தைகள் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.