Ads Area

சம்மாந்துறை மாணவனின் கண்டுபிடிப்பு -தன்னியக்க முறையில் இயங்கும் கைகழுவும் இயந்திரம்.

சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த  உபைதுல்லாஹ் என்ற மாணவன் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட பயன்படுத்தும் sencer முறையில் உருவாக்கப்பட்ட தன்னியக்க மற்றும் பொறிமுறையிலும் இயங்கக்கூடிய கைகழுவும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார். 

இக் கை கழுவும் இயந்திரத்தினை தேவைப்படுவோர் அவரிடமிருந்து கொள்வனவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

இவரின்  இப் புதிய கண்டுபிடிப்பினை சம்மாந்துறையில் பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி தேசிய சர்வதேச ரீதியில் சாதனை படைத்தவரும், தங்கப்பதக்கங்களைப் பெற்றவருமான சம்மாந்துறை கோரக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினோஞ் குமார் அவர்களும் மற்றும் சமாதான நீதவானும், எழுத்தாளருமான திரு. முஹம்மட் அமீர் அவர்களும் நேரில் சென்று பார்வையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இவர் சம்மாந்துறையின் மதிப்பிற்குமுரிய பிரபல மௌலவி  முஸ்தபா அவர்களின் புதல்வராவார்.

வளர்ந்துவரும் இளம் கண்டுபிடிப்பாளரான உபைதுல்லாஹ் அவர்களுக்கு சம்மாந்துறை24 இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe